தூத்துக்குடியில் நாளை மறுநாள் (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தூத்துக்குடியில் நாளை மறுநாள் (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் நாளை மறுநாள் (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் நாளை மறுநாள் (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் பழுதான மின் பாதைகள் அனைத்தும் சரிசெய்யும் பணி நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் விளாத்திகுளம் மற்றும் வல்லநாடு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் மின்கம்பங்கள் அவ்வப்போது பழுதடைந்து கொண்டிருக்கிறது. இதனால், மின்கம்பங்களில் கசிவு ஏற்பட்டு எதிர்பாராத சில விபத்துகளும் ஏற்பட காரணமாக அமைகிறது. அதிலும் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் மின்கம்பங்களில் பழுது ஏற்படுகின்றது. இதனால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மட்டும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்கம்பங்கள் உள்ள பழுதுகளை சரி செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம், வல்லநாடு ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை பழைய சுங்கச்சாவடி, முடிவைத்தானேந்தல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், வல்ல நாடு அருகிலுள்ள பொட்டலூரணி விலக்கு, தெய்வச்செயல்புரம், எல்லநாயக்கன்பட்டி, ராமநாதபுரம், வல்லநாடு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, விளாத்திகுளம், கோனார்குளம், நானல் காட்டாங்குளம், சேதுராமலிங்கபுரம், கிள்ளிகுளம், அனந்தநம்பி குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குளத்தூர் பகுதிக்கு அருகிலுள்ள கலைஞானபுரம், முள்ளூர், கொல்லம் பரும்பு, செங்கல்படை, மார்த்தாண்டம்பட்டி, வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் பகுதிக்கு அருகிலுள்ள வடக்கு கோவங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மின்கம்பங்கள் பழுது பார்க்க உள்ளதால் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!