சிவகிரியில் நாளை (ஜூன் 28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் சிவகிரியில் விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஜூன் 28) இப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனை காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு மாதந்தோறும் மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. அத்துடன் இதனை மின்வாரியம் முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாளை சிவகிரியில் உள்ள கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது. அதனால் நாளை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த தங்க விலை – நகைப்பிரியர்கள் கவலை!
இதனை தொடர்ந்து விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான சிவகிரி, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி, வழிவழிகுளம், ராயகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 28) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கடையநல்லூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் மாரியப்பன் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.