சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
காரைக்குடி மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக நாளை ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் பாதைகளில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் மற்றும் சாய்ந்த மின் கம்பிகளை சரி பார்த்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் வாரியம் செய்து வருகிறது. அந்த வகையில் காரைக்குடி மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம், எச்.டி.சி. பீடரில் ஆறுமுக நகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரி நகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் மின்தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
கானாடுகாத்தான் துணை மின் நிலையம் மற்றும் கல்லல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:
கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப்பொய்கை, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி, சாத்தரசம்பட்டி பீடரில் கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாக்கவயல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:
மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர், வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயங்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை. மித்ராவயல் பீடரில் சாக்கவயல் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:
கண்ணங்குடி பீடரில் கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி, வேப்பங்குளம் பீடரில் – உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேல முன்னி, வேலாயுத பட்டினம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை மற்றும் பொட்டப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:
தெ.புதுக்கோட்டை, இடைக்காட்டூர், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், எஸ்.காரைக்குடி, சன்னதி புதுக்குளம், மேலப்பாவூர், கொசவபட்டி, காஞ்சிரங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
குறிப்பு : கொன்னக்குளம், மானாமதுரை சிப்காட், மனக்குளம், மானாமதுரை நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்கும் என தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.