புதுக்கோட்டையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி அருகாமையில் உள்ள புதுக்கோட்டை மின் நிலையங்களில் மின் விநியோகம் பெரும் பகுதிகளான குலையன்கரிசல், போடம்மாள்புரம், திருமலைபுரம், பேய்குளம் ஆகிய பகுதிகளில் மின் சார்ந்த பணிகள் நடைபெற இருப்பதால் நாளை வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில சமயங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறார்களோ அதன் விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
இந்த பணிகளை மேற்கொள்ளும் போது மின்னணு சாதனங்களில் கோளாறு, மின்னணு துண்டிப்பு, மரக் கிளைகளை அகற்றுதல் மற்றும் மின்கசிவு ஆகியவை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க முடிகிறது. அதன்படி, தூத்துக்குடி அருகாமையில் உள்ள புதுக்கோட்டை மின்சாரம் பெரும் பகுதிகளான குலையன்கரிசல், போடம்மாள்புரம், திருமலையாபுரம், பேய்குளம் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப் பகுதியை சார்ந்த எல்லை நாயக்கன்பட்டி, ராமநாதபுரம் மற்றும்
ஜூலை 5ம் தேதியன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
பத்மநாபமங்கலம் குவாரி ஆகிய பகுதிகளிலும், குளத்தூர் மின்சாரம் பெரும் பகுதிகளான வைப்பார் உப்பளம் பகுதியிலும், சாயர்புரம் மின் நிலையங்களுக்கு உட்பட்ட இருவப்பபுரம், சோலை புதூர் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் மின் நிலையங்களுக்கு சார்ந்த கோவங்காடு உப்பளம் பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்துள்ளார்.