நாமக்கல்லில் நாளை (ஜூன் 15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 15 நாளை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் நாளை (ஜூன் 15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சாரத்துறை அறிவிப்பு!
அவ்விதமாக நாளை (ஜூன் 15) புதன்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எருமப்பட்டி துணை மின் நிலையம்:
அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இராசிபுரம் துணை மின் நிலையம்:
அங்கு பராமரிப்பு பணிகள் இருப்பதால் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளான ராசிபுரம், முத்து காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம்,மோளப்பாளையம், அரசம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.