மயிலாடுதுறையில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை(ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதற்கான காரணங்கள், மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
மத்திய அரசில் தேர்வில்லாமல் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை..!
இந்நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாலையூர், மேக்கிரிமங்களம் மற்றும் குத்தாலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மேற்கண்ட பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர்!
இந்நிலையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்துர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கொடிமங்கலம், மேக்கிரிமங்கலம், பழையக்கூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம் கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.