தருமபுரியில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தருமபுரியில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தருமபுரியில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தருமபுரியில் நாளை பாப்பிரெட்டிப்பட்டி, 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஏப்ரல் 5) தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இந்த பராமரிப்பு பணிகள் தமிழகம் முழுவதும் மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, 110/33-11 கிலோ வோல்ட் உள்ளிட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

கரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தருமபுரி செயற்பொறியாளர் எம்.இந்திரா அறிவித்துள்ளார். மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம்,காலப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, மெணசி, சாமியாபுரம் கூட்ரோடு, கவுண்டம்பட்டி, பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஹள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, நேதாஜி பைபாஸ் சாலை, அம்பேத்கர் காலனி, ராஜாபேட்டை, மாட்லாம்பட்டி, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கொங்கு செட்டிப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, இண்டமங்கலம், கன்னிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!