சென்னையில் ஜூலை 13ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
சென்னையில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை சென்னை மாநகர மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு ஏதும் நடைபெறாமல் இருப்பதால் தொடர்ந்து 10 நாட்களாக கடந்த மாதத்தில் பணிகள் நடைபெறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளின் விவரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!
இந்நிலையில், அவசர பராமரிப்பு பணிகள் சென்னை நகரின் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) நடக்க இருப்பதாகவும், இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்ய இருப்பதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
எழும்பூர் பகுதியின் சைனஸ் ரோடு, பி.டி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனெரல் காலின்ஸ் ரோடு, குறவன் குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், ஹன்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு, கேசவ பிள்ளை பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.