தமிழ் நாட்டில் நாளை (செப்.30) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – இப்போவே தெரிஞ்சுக்கிட்டு ரெடியா இருங்க!

0
தமிழ் நாட்டில் நாளை (செப்.30) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - இப்போவே தெரிஞ்சுக்கிட்டு ரெடியா இருங்க!
தமிழ் நாட்டில் நாளை (செப்.30) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - இப்போவே தெரிஞ்சுக்கிட்டு ரெடியா இருங்க!
தமிழ் நாட்டில் நாளை (செப்.30) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – இப்போவே தெரிஞ்சுக்கிட்டு ரெடியா இருங்க!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.30) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மின்தடை ஏற்படவுள்ள உள்ள பகுதிகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழக மின்வாரியத்தின் கடனை ஈடு செய்ய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின் வாரியத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு புதிய திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டது. பிறகு அதனை தமிழக மின்வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததன் பேரில் அதிகாரபூர்வமாக தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரும் நாட்களில் மின் வாரியத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் மின்வாரியம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் வழக்கம் போல நடந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதி நாளான செப். 30 (நாளை) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், கோபால்பட்டி மற்றும் செந்துறை ஆகிய 3 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதெல்லாம் தேவையில்லாத வழக்கு.. தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Exams Daily Mobile App Download

அதனால் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்டகொண்டையம்பட்டி, சக்கிலியான்கொடை, கோட்டைக்காரன்பட்டி, கோம்பைபட்டி, பெரிய முளையூா், மணக்காட்டூா். கே.புதூா், பழனி பட்டி,மேற்குபட்டி, அய்யாபட்டி, செடிப்பட்டி, சேவா பால் பண்ணை , பெருமாள் கோவில்பட்டி, கே.குரும்பபட்டி, கோபால்பட்டி, கொர சின்னம்பட்டி, ராவுத்தம்பட்டி, சின்ன முளையூா், லி.மலையூா், குடகிப்பட்டி, மாரியம்மன் கோயில் பகுதி, காந்திநகா், கணவாய்பட்டி, கோவில்பட்டி வடக்கு மற்றும் தெற்கு, எரமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!