தமிழகத்தில் செப்.13 ( நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்.13 ( நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.13 ( நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.13 ( நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்டங்களில் பகுதி வாரியாக மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் செப்டம்பர் 13ம் தேதியான நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள மின் நிலையங்களில் பழுதுகள் இல்லாமல், முறையாகவும் சீராகவும் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு வசதியாக மாதந்தோறும் முறையாக முன்னறிவிப்பு செய்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. தற்போது ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை செப்டம்பர் 13ம் தேதி மின்தடை செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழக ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிணம் காத்தான் துணைமின் நிலையத்தில் ஓம்சக்தி நகர் உயர்மின் பாதையில் மற்றும் கீழக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடக்க உள்ளது. இதனால் பராமரிப்பு பணிகள் நடக்கும், சேதுபதி நகர், ஓம்சக்தி நகர், ஆல்வின் பகுதிகள், வசந்த நகர், வெளிப்பட்டிணம், செட்டித்தெரு, தாயுமானவசுவாமி கோயில் தெரு, இந்திராநகர், சிவன் கோயில் தெரு, ரோஸ் நகர், கான்சாகிப் தெரு, டிடி விநாயகா பள்ளித் தெரு, வைகை நகர், அம்மா பூங்கா, ராஜ பள்ளி விளையாட்டு மைதானப் பகுதி, தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.

செப்.16 அன்று UGC NET 2022 ஹால்டிக்கெட் வெளியீடு – முக்கிய விவரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download

இதேபோல், கீழக்கரையை சேர்ந்த பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, ஏக்ககுடி, நல்லாங்குடி, திருஉத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம், கல்லகுளம், செங்கல்நீரோடை, கீழக்கரை நகர், கீழக்கரை 500 பிளாட் பகுதி, மேலத்தெரு, வள்ளல் சாலை, வடக்குத் தெரு, சின்னக்கடை தெரு, சாலை தெரு, சங்கு வெட்டி தெரு, சின்னமாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடுமதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் பொறியியல் கல்லூரிகள், ஆழ்வார்க் கூட்டம், விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!