மதுரையில் நாளை (ஜூலை 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் ஆனையூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதுமே தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின்துண்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் தான் பெரும்பாலும் மின்கசிவு ஆகிய நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. அதாவது, மின்கசிவு ஏற்பட்டு சாலையில் தேங்கி கிடக்கும் நீரின் காரணமாக அறியாதவிதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. மேலும், இந்த விபத்துகளில் இருந்து மீள அவ்வப்போது அரசின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக பழுது பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், மின்தடை செய்ய இருக்கும் பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவுபடுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆனையூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தெந்த பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்பட இருக்கிறது என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய தகவல்!
அதாவது, ஆனையூர் பகுதியில் உள்ள பாலமேடு பிரதான சாலை, சொக்கலிங்க நகா் முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், புதுவிளாங்குடி, கூடல் நகா், ஆா்.எம். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி எதிா்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி வீதி, திண்டுக்கல் பிரதான சாலை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகா், கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.