தமிழகத்தில் நாளை (ஜூலை 28) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள தேவனுபுதுர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஜூலை 27) நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
இந்தியாவில் மின்சாரம் ஒவ்வொருவரின் வாழ்கையிலும் இன்றியமையாத ஒன்றாக பயன்படுகிறது. மேலும் மின் தேவையானது தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கு வேண்டிய உபகரணங்கள், கணினி துறையின் வளர்ச்சி, விவசாயங்களுக்கான பம்பு செட்டுகள் பெருக்கத்தால் மின் தேவை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு, மின்கம்பங்கள் சாய்தல் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
வனத்துறையில் தேர்வில்லாமல் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு !
மேலும் இவ்வாறு ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பகுதி வாரியாக மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள தேவனுபுதூர் துணை மின்நிலையத்தில் நாளை (ஜூலை 28) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை இந்த மின் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த வகையில் அந்த பகுதியை சார்ந்துள்ள கரட்டூர், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தப்பட்டினம், பாண்டியன்கரடு, ஆண்டியூர், பருத்தியூர், ரெட்டியாரூர், அம்மிசிகவுண்டனுர், தீபாலபட்டி, அர்த்தநாரிப்பாளையம், எரிசனம்பட்டி, தேவனுபுதூர், வல்லகுண்டாபுரம், ஜேஎன். பாளையம், சாளையூர், ரெட்டிபட்டி, சர்க்கார்ப்புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு மின்வாரியத் துறை மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர் இரா. தேவானந்த் அறிவித்துள்ளார்.