தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதாக கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மின்சாரத்துறையின் சேவையும் இன்றியமையாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மின்சார துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போதைய அரசானது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மிகவும் முனைப்புடன் செயல்படுகிறது. மின் இணைப்புகளை மக்கள் எளிதில் பெறும் விதமாக எளிய முறைகளை கொண்டு வந்துள்ளது. இதனால் மக்கள் எளிதாக தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு அரசு மின்சார வாரியமானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களின் கீழ் செயல்படும் மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படும். மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள்,மரக்கிளைகள் அகற்றும் பணிகள், புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணிகள்,புதிய இணைப்புகள் வழங்கும் பணிகள் போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மின் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மின்தடை அறிவிக்கப்படுகிறது.

கோயம்புத்தூரில் ரூ.21,420/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, அ.மேட்டூர், கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், பெரியசாமி கோவில், அரசடிக்காடு, மேல குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம் ஆகிய ஊர்களிலும், கை.களத்தூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், அய்யனாரபாளையம், காரியனூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களிலும் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்தடை செய்யப்படுவதாக கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!