தமிழகத்தில் நாளை ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 22ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை அறிவிப்பு
மின்சாரம் என்பது ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்தில் மின்சார துறையில் பல சீர்திருத்தங்களை சரி செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக அரசானது மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மின் இணைப்புகளை மக்கள் எளிதில் பெறும் விதமாக மின்சார வாரியம் எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அனைத்து விதமான மின்சார பணிகளையும் செய்ய ஏதுவாக உள்ளது.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். அதாவது தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மாதம் ஒரு முறை மின்தடை அறிவிக்கப்பட்டு, மின்நிலையங்களில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், ஏதேனும் வயர்கள் பழுதடைந்து இருக்கிறதா மற்றும் வயர்களில் உரசும் மரக் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை செய்யும் ஊழியர்களுக்கும், மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 22) வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில், நாளை வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதிகளான பூ சாலக்குடி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான மு. சிறுவனூர், தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன் வயல், கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்கலம், மு. சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தாழைப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என சிவகங்கை மின் செயற்பொறியாளர் சி. ரவி தெரிவித்துள்ளார்.