தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
காரைக்குடியில் வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) அன்று கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் எம். லதா தேவி தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற வேண்டியது என்பது மிக அவசியமான ஒன்று. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துக்கள் நேரிடும். அதனால் எதிர்பாராத இழப்புகள் நேரிடவும் அதிகளவு வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்ப்பதற்காகவே மாதம் ஒரு முறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், தற்போது பெய்து வரும் தொடர் மழையாலும் மின் பாதிப்பு ஏற்பட அதிகளவு வாய்ப்பு உள்ளது. அதற்காகவே இந்த மின் பராமரிப்பு பணியானது முக்கியம். அவ்விதமாக நாளை மறுநாள் (ஆக. 4) காரைக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அப்பணியின் போது ஒருசில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், எந்தெந்த பகுதிகளில் எப்போது வரை மின்தடை செய்யப்படும் என்ற மொத்த விவரத்தையும் தற்போது காரைக்குடி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைப்பு
அதாவது, கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ஸ்ரீ ராம்நகர், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று காரைக்குடி மாவட்ட மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.