தமிழகத்தில் செப்.17 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்.17 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.17 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.17 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழக மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 17ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழக மின்வாரியம் அதிக கடனில் உள்ளதால் மத்திய அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின் வாரியத்திற்கு கடிதம் எழுதியது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்த அறிக்கையை தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. தற்போது மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது மின் வாரியத்தை டிஜிட்டல் மையமாகும் நோக்கில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் எப்போதும் நடந்து வரும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த பணியின் போது துணை மின் நிலையங்கள் மற்றும் தெருக்களில் உள்ள மின் கம்பங்களிலும் மின் இணைப்புகளை சரி பார்த்தல், மின் கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து செப்டம்பர் 17ம் தேதி தென்காசி மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விஐபி தரிசனம் ரத்து!

Exams Daily Mobile App Download

அம்மாவட்டத்தில் மலையன்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கல முத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. அதனால் மலையான்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்க சமுத்திரம், மகாதேவர் பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!