தமிழகத்தில் செப்.12 ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் மின் பாதை மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இப்பதிவில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்து காண்போம்.
மின்தடை:
தமிழக மின் வாரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் முறை விரைவில் கொண்டு வரப்படப்படவுள்ளது. மேலும் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி மின் சார்ந்த பணிகளை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மின் பராமரிப்பு பணியை தொடர்ந்து செப். 12ம் தேதி விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் மின் பாதைகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் அல்லம்பட்டி, காந்தி நகர், எம்.ஜி.ஆா். நகா், டால்பின் நகா், அனுமன் நகர், சங்கரேஸ்வரி கோவில் தெரு, காமராஜபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) அன்று மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்