தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – தமிழ்நாடு மின்வாரியம் தகவல்!
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை ஏற்படவுள்ளதாக உள்ளதாக மின்துறை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு:
இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மின் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஒரு சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் ஒன்றிய அரசு மின் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பல்வேறு வகைகளில் மின் உற்பத்தி செய்து வருகிறது. அதாவது நீர், காற்று, அனல் மற்றும் காற்றாலை போன்றவைகளின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு மீண்டும் மானியம்? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய துணை மின் நிலையங்களை பராமரிப்பதற்காக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்தடை செய்யப்படும் பகுதிகளில் மின் கம்பிகளை சரிசெய்தல், மின் இணைப்புக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சமயத்தில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் மின்தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாளாடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான தர்மநாதபுரம், மைக்கேல்பட்டி, மேல பெருங்காவூர், ஒத்தை வீடு, சிறுமருதூர், செம்பழுனி, புதுக்குடி, மேளவாளாடி, எசனைகோரை, அப்பாதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை(ஜூலை 27) புதன்கிழமை மின் தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.