தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின்னிணைப்பு துண்டிப்பு ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அறியாத விதமாக மின்கசிவு ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட காரணமாகிவிடுகின்றன. இதனால் இது போன்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. அதாவது, ஏதேனும் மின்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா எனவும், ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா எனவும் சரிபார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இது மட்டுமல்லாமல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும், காலையில் இருந்தே மின்பராமரிப்பு பணிகள் தொடங்கிவிடுகின்றன. அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் நாளை புதன்கிழமை (ஜூலை 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தேவிபட்டினம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரியம் அறிவித்துள்ள மின்தடை செய்யப்படும் பகுதிகளை பார்க்கலாம்.
இந்தியாவில் புதிதாக 14,830 பேருக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை!
அதாவது, தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தேவிபட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான சித்தாா்கோட்டை, கழனிக்குடி, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்பகிா்மான மற்றும் மின் விநியோக ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்