தமிழகத்தில் ஜூலை 27ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 27ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 27ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 27ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஆ.சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

மின்சாரம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு அத்தியாவசிய தேவையாக உள்ளது. முந்தைய காலத்தில் மின்சாரம் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு செயல்பாடும் நடைபெற முடியாத நிலை வந்துள்ளது. இதற்கு காரணம் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் ஆகும். ஒன்றிய அரசும் அதற்கேற்றவாறு மக்களுக்கு தரமான மின் சேவையை வழங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டு மாநிலங்களிடம் இருந்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்த துணை மின் நிலையங்களின் மூலமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அத்தகைய துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பொருட்டு மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் கம்பிகளை சரிசெய்தல், மின் இணைப்புகளுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றுதல் போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்தவித உயிரிழப்பும், இடையூறும் ஏற்படாதவாறு மின்தடை அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர்க்கு ரூ.25,000 அபராதம் – புதிய எச்சரிக்கை!

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எரியோடு, நாகையக்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, நல்லமனார்கோட்டை , மறவப்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஆ.சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!