தமிழகத்தில் ஆக. 6ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆக. 6ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக. 6ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக. 6ல் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் வருகிற (ஆகஸ்ட் 6) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதுமே தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின் துண்டிப்பு என்பது அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் தான் பெரும்பாலும் மின்கசிவு ஆகிய நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. இந்த மின்கசிவால் சாலையில் தேங்கி கிடக்கும் நீரின் காரணமாக அறியாத விதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. அதனால் இந்த விபத்துகளில் இருந்து மீள அவ்வப்போது அரசின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக பழுது பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அவ்விதமாக வருகிற ஆகஸ்ட் 6ந் தேதி திருநெல்வேலி மாவட்ட கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அம் மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்து உள்ளார்.

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் :

ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், கூனியூர், வெள்ளாங்குளி, புதுக்குடி, ரெங்கசமுத்திரம், அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து – பயணிகள் கவனத்திற்கு

அதேபோல், ஆவுடையானூர், மணல் கட்டனூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!