தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை ) வரை அந்தந்த நாட்களில் காலை முதல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
Exams Daily Mobile App Download
அவ்விதமாக இன்று (ஜூலை 28) திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 4 க்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.
ரயில்வே பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – சிறப்பு ரயில் சேவைகள் நவம்பர் வரை நீட்டிப்பு!
மேலும், நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 29) அன்று திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஐ.ஆர்.என். பின்புறம், ராஜாஜிபுரம், ஸ்ரீநிகேதன் பள்ளி, எஸ்.வி.கோவில் தெரு, காந்திபுரம், கணபதி நகர், தேவி மீனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளுக்கும காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருவதாலும் திருத்தணி துணை மின் நிலையத்திற்குட்பட்ட சரஸ்வதி நகர், வள்ளியம்மாபுரம், வள்ளியம்மாபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் பெருமாள்தாங்கல் புதூர் ஆகிய இடங்களில் நாளை (ஜூலை 29) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 30) ஆகிய 2 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் எனவும் மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.