மதுரையில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி, மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக உசிலம்பட்டி துணை மின் நிலையம், தும்மக்குண்டு துணை மின் நிலையம், சமயநல்லூர் மின்கோட்டம் விக்கிரமங்கலம் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை எந்தெந்த ஏரியாக்களில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்தடை:
தமிழகத்தில் மின் வாரியம் சார்பில் மாதந்தோறும், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின் வாரியம் சார்பில் மின் தடை செய்யப்படும் பகுதிகளை அறிவித்துள்ளது. அப்போது பொது மக்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின் படி உசிலம்பட்டி துணை மின்நிலையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.மேலும் தும்மக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதையடுத்து சமயநல்லூர் மின்கோட்டம் விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.50 செலுத்தி தேசியக்கொடி பெற உத்தரவு!
உசிலம்பட்டியில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள்: உசிலம்பட்டி நகர் பகுதி, கவுண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளப்பட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லதேவன்பட்டி, சீமானூத்து, கொங்குபட்டி, மேக்கிழார்பட்டி, கீரிப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையால் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
தும்மக்குண்டு மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள்: சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலபுரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி வலங்கை குளம், உச்சபட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி அதனை சுற்றிய ஊர்களிலும் மின்தடை செய்யப்படும். அதேபோல, இடையபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லானி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும். வாலாந்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அய்யனார்குளம், குறவகுடி, விண்ணகுடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், விக்ரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பனம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மின் தடைசெய்யப்படும். அதேபோல மொண்டிக்கொண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி மின்தடை செய்யப்படும்.
சமயநல்லூர் மின்கோட்டம் விக்கிரமங்கலம் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள்: விக்கிரமங்கலம், காடுபட்டி, பாண்டியன் நகர், நரியம்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலபெருமாள்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுமுதலைகுளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, வடுகபட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம்.