ஜூலை 19ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 19ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் பராமரிப்பு, மின் கம்பிகள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் மாவட்டங்கள் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
நபார்டு வங்கியில் வேலை – 162 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது
அதன்படி சென்னையில் டைடினாமஸ் ரோடு பெரம்பூர், பேரக்ஸ் ரோடு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவபிள்ளை பார்க், வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன் குளம், நேரு விளையாட்டு அரங்கம், நாவல் மருத்துவமனை ரோடு,நங்கநல்லூர், நேதாஜி காலனி, எம்.ஜி.ஆர் நகர், பி.வி ராஜமன்னார் சாலை, புகழேந்தி தெரு ஆகிய பகுதிகளில் 19.07.2021 அன்று மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் பி.வி ராஜமன்னார் சாலை, புகழேந்தி தெரு, சுப்பிரமணிய சிவா தெரு, கோகுலம் டவர்ஸ், ஆண்டவர் நகர், சென்ட்ரல், எஸ்.பி.ஐ காலனி, காங்கதார நகர், கண்ணகி தெரு, இந்திரா நகர், கங்கையம்மன் கோயில் தெரு, சாய் நகர் அணைக்ஸ், தசரதபுரம், வேளச்சேரி, ஜீவ காந்தி தெரு, சங்கரன் தெரு, ராகவா நகர், அண்ணா தெரு, கண்ணகி காலனி, செந்தமிழ் நகர், ராமமூர்த்தி அவென்யூ, தில்லை கங்கை நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 19.07.2021 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று சென்னை மின்வாரியம் தெரிவித்துள்ளது.