கன்னியாகுமரியில் ஏப்ரல் 8 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் அதனால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களின் அன்றாட வேலைகளை மின்தடை ஏற்படுவதற்கு முன்பே செய்து முடித்து விடுவார். இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 30 கடைசி நாள்!
மேலும் குழித்துறை மின்வினியோக செயற்பொறியாளர் மின்தடைக்கான இடங்களை அறிவித்து உள்ளார். மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளாக, முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம்,விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வே துறையில் புதிய வேலை – 147 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது..!
அதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை,வளனூர், சூழால், பாத்திமா நகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.