தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடைக்கான பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 4 அன்று உடுமலை உட்பட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்ய போவதாக அம்மாவட்ட செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை படும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் மேலும் படியுங்கள்.
மின்தடை :
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். ஏனெனில் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் நேரிடவும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காக தான் மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
Exams Daily Mobile App Download
இவ்வாறு மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட மின்வாரியம் முன்னதாகவே தகவல் வெளியிடும். அதுவே அம்மாவட்ட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வசதியாக அமையும். அவ்விதமாக நாளை திருப்பூர் மாவட்ட (ஆக. 4) உடுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறார்கள். அப்பணியின் நிமித்தம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என்ற விவரத்தையும் மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ
உடுமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் வெஞ்சமடை, மானுப்பட்டி, பெதப்பம்பட்டி பீடர், புஷ்பகிரி வேலன் நகர், சங்கர் நகர், காந்தி நகர்-2, போடிபட்டி, அண்ணா நகர், காமராஜ் நகர், பள்ளபாளையம், கொங்கல குறிச்சி, சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி, குறிச்சிக்கோட்டை, வி.ஜி.,ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம் ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை அன்று காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படும்.