தமிழகத்தில் நாளை (ஆக. 22) மின்தடைக்கான பகுதிகள் – மின்சார வாரியம் தகவல்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் விபத்துகளை தடுக்கவும், மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மாற்றுதல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் தெருக்களில் வளர்ந்துள்ள உயரமான மரங்கள் மின் பாதைகளுக்கு தடையாக இருக்கும்.
அதனால் அவைகள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (22.08.2022) சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ண மங்கல பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
WhatsApp ல் வரவிற்கும் புதிய அம்சங்கள் – வெளியான அப்டேட் இதோ!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து காளாப்பூர் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்