தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) திருநெல்வேலியில் விஜயாபதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை திருநெல்வேலியில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை திருநெல்வேலியில் விஜயாபதி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மேலும் இது தொடர்பாக வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளதாவது, நாளை மறுநாள் (ஆக.23) வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட விஜயாபதி துணை மின் நிலையத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து விஜயாபதி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான முருகானந்தபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளார். அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மின்வினியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!