தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவரா நீங்கள்? வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இதனை பெற நினைப்பவர்கள் என்னென்ன செய்ய வேண்டும். வேண்டிய ஆவணங்கள் வழிமுறைகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த அறிவிப்பை அடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த ரேஷன் கார்டை பெற விரும்புபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரு வேளை வேறு மாநிலமாக இருந்தால் குறைந்தது ஆறு மாத காலம் இங்கே தங்கி இருத்தல் அவசியம். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். ஆதார் கார்டு, முகவரிச் சான்று கட்டாயம் தேவை. பொதுவாக தனிநபருக்கு கார்டு கிடைக்காது. குடும்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். குறைந்தது கணவன் – மனைவி ஆகிய இருவர் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். குழந்தைகள் பெயர் பின்னர் சேர்க்கப்படும்.
LPG சிலிண்டருக்கான மானியம் இனி கிடைக்காது? நிதியமைச்சர் விளக்கம்!
மேலும் புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். அதற்கு திருமண அழைப்பிதழ் கட்டாயம். இவர்களின் பெயர் பெற்றோர்களின் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்ட பிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அரசின் இ – சேவை மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக எளிதாக விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும். பிறகு கார்டு தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட நபர் அங்கே சென்று கார்டை வாங்கிக் கொள்ளலாம்.