தமிழகத்தில் கோடை விடுமுறை நாட்கள் குறைக்கப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைகிறது.
கோடை விடுமுறை
கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.இரண்டு வருடமாக பொது தேர்வுகள் நடத்தபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த வருடம் கொரோனா அச்சம் குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த வருடம் கண்டிப்பாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலம் முழுவதுமாக பாடம் முடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் தமிழக கல்வித்துறை பாட சுமையை குறைத்து மாணவர்களின் மனநிலையை சீரியாகியது.
அதன்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்பதும் அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி ஆரம்பித்து 31ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.இது தவிர 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.