PPF & செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் வட்டி உயர்வு? எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்!

0
PPF & செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் வட்டி உயர்வு? எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்!
PPF & செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் வட்டி உயர்வு? எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்!
PPF & செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் வட்டி உயர்வு? எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்!

2022 – 23 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் மாற்றம் இல்லாத நிலையில், நிதியாண்டின் 2வது காலாண்டில் செல்வமகள் சேமிப்பு திட்டம், PPF , NSC ஆகிய திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.

வட்டி உயர்வு:

என்எஸ்சி, பிபிஎஃப் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அதாவது, இந்தத் திட்டங்கள் ஜூலை 1, 2022 முதல் அதிகமான வருமானத்தைப் பெறவுள்ளன. ஜூலை 1 முதல், மத்திய அரசு அதன் பிபிஎஃப் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தக்கூடும். ஒவ்வொரு காலாண்டு தொடங்கும் முன்னரும், நிதி அமைச்சகம் அரசு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்து அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இத்தகைய சூழ்நிலையில், ஜூலை முதல், அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.50 முதல் 0.75 சதவீதமாக உயர்த்தி நிதி அமைச்சகம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது. அந்த வகையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்பட ஒருசில அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 7.6% வட்டி செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் நிலையில் 8.00% அல்லது 8.10% என மாற்றம் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 10 வரை விடுமுறை நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

தற்போது, பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) 7.1 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. மேலும், என்எஸ்சி-இல் 6.8 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. எனவே, பிபிஎஃப் விகிதம் 7.81% ஆகவும் மற்றும் என்எஸ்சி வட்டி விகிதம் 8.00% ஆகவும் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தவிர, கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் ஜூலை மாதம் முதல் இந்தத் திட்டங்களுக்கான வட்டியை அரசாங்கம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!