தமிழக கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் விரைவில் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ச்சனை:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் கோவில்களுக்கு நேரடியாக சென்று மக்கள் தரிசனம் மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் திருவிழாக்கள் நடைபெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரனாக கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4000 மற்றும் நிவாரண பொருட்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கோவில் அர்ச்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவாக்ஸின் vs கோவிஷீல்டு – இரண்டில் சிறந்த தடுப்பூசி எது? ஆய்வு முடிவுகள் இதோ!
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சம்ஸ்கிருத மொழிகளில் அர்ச்சனை செய்யப்பட்டு வருவது வழக்கம். இது குறித்து அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் விரைவில் தெரிவிப்பர் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வதர்க்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அருமை, தமிழ் கடவுளுக்கு எதுக்கு மற்ற மொழியில் அர்ச்சனை
:-1: தமிழ் கடவுள், தெலுகு கடவுள், கன்னட கடவுள், இலங்கை கடவுள், டெல்லி கடவுள், பஞ்சாப் கடவுள் …. ????????????????????????
ரஷ்ய மொழியிலும் அர்ச்சனை செய்யப்படுமா?