தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சிறப்பு நிகழ்வான சித்திரைத் தேர்த்திருவிழா வரும் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட கோவிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது மற்றும் திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ராமாவதாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் தான் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களும் திறக்கப்படவில்லை. மேலும், கோவில்களில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் மூடல் – அரசு அறிவிப்பு!

தற்போது சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களும் திறக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. அதன்படி சித்திரை தேர் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். விழாவின் நான்காம் நாளான ஏப்ரல் 24 அதிகாலை நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபம் வந்தடைந்தார்.

Exams Daily Mobile App Download

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட சில பணியாளர்களோடு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மே 7-ஆம் தேதி வேலை நாளாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!