தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சிறப்பு நிகழ்வான சித்திரைத் தேர்த்திருவிழா வரும் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட கோவிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்ட பெருமையை பெற்றுள்ளது மற்றும் திருமாலின் அவதாரங்களில் முக்கிய அவதாரமாக கருதப்படும் ராம அவதாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் தான் அமைந்துள்ளது. இத்தகைய எக்கச்சக்கமான சிறப்பம்சங்களை பெற்றுள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு நிகழ்வான சித்திரை தேர் திருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களிலும் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதற்கு பிறகு கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து கோவில்களிலும் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடைபெறுவதால் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த நாட்களில் தேர்வுகளில் ஏதும் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வும் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மே 7ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!