தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை – அரசு உத்தரவு!

0
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை - அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை - அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை – அரசு உத்தரவு!

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள்.

நாளை விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தாக்கம் சற்று கட்டுக்குள் வந்ததால் பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். 10,11,12ம் வகுப்பு தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுக்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை.மேலும் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் அமைக்கப்படும் பள்ளி மேலாண்மை குழுக்களில் 15 பேர் பெற்றோர், அதிலும் 10 பேர் பெண்கள். மீதமுள்ள 5 நபர்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், சுய உதவிக்குழுவினர் என 20 பேர் உறுப்பினர்கள் இருப்பார்கள்.

ExamsDaily Mobile App Download

இந்த குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர் தான் இருக்க வேண்டும். இதிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மை பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோரில் ஒருவர் துணைத்தலைவராக தேர்வு செய்யப்படுவார். இந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நாளை (ஏப்ரல் 23) அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது. இதனால் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு படி, மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!