சென்னையில் நாளை (ஏப்ரல் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெரிதாக வளர்ந்து தொங்கும் பெரிய மரங்களில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவை இல்லாத மின்கம்பிகளை அகற்றுவதற்காகவும் மின் வாரியத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடத்தி வருகிறது. மேலும் இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பொதுவாக மின்தடை குறைந்த பட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 6 மணி வரை இருக்கும். இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை ஒத்திவைப்பு!
இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 முதல் அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!
சென்னையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், அம்பாள் நகர், டில்லி பாபு நகர், பிரபு நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை மின்தடை ஏற்படும் முன்னரே செய்து முடித்து கொள்ள வேண்டும் என்றும் மின்வாரியம் சார்பாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.