தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் கோவிலில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற இருப்பதால் மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஏப்ரல் 30 ஆம் தேதி பணி நாளாகவும் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தக் கோவிலின் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றத்திற்கு பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – தவறாமல் படிங்க!

மேலும் சித்திரை திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மன் வாகனத்தில் கோவிலை சுற்றிலும் உலா வந்திருக்கிறார். சித்திரை திருவிழா முடியும் வரை அம்மன் ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் என உள்ளிட்ட பல வாகனங்களில் கோயிலை சுற்றி வலம் வருவார். இப்படி சிறப்பாக ஒன்பது நாட்கள் நிறைவடைந்து பத்தாம் நாள் தான் தேர்த்திருவிழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் மாரியம்மன் தேர் திருவிழாவிற்கு பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்து தங்களுடைய நேத்திக்கடனை செய்து விட்டு செல்வர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெறவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேர் திருவிழாவையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 19 ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வு வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் சில குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஏப்ரல் 30ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!