தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு விடும். மாநிலம் முழுவதுமாக அல்லாமல் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிடும். குறிப்பிட்ட நாளிற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.

IPL 2022: ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டது குறித்து தோனியின் கருத்து – உத்தப்பா விளக்கம்!

அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு மற்றும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளித்தேர்வுகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனை ஈடுசெய்யும் பொருட்டு மே 7-ந் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன்கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்களைக் கொண்டும் செயல்படும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!