தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளன்று அதாவது ஏப்ரல் 16ம் தேதி அன்று அம் மாவட்டத்திற்கு ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இத்திருவிழாவை காண மதுரை மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களும் பிற மாவட்ட மக்களும் வருகை புரிவர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை. கோயில் வளாகத்தில் அர்ச்சகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நடப்பாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அமல்? முழு விவரம் இதோ!
கடந்த 5ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டது. அடுத்த நாள் காலை 7 மணியளவில் கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும், சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி உலா வந்தனர். அதனை தொடர்ந்து நாளை (ஏப்ரல் 14) மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தங்கையின் கல்யாணத்தை காண கள்ளழகர் வைகை ஆற்றை கடந்து வருவார். இதனையே அழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது என்பது வரலாறு.
இந்த சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு விழாக்கள், சுவாமி ஊர்வலம், பூ பல்லாக்கு, தேரோட்டம் என பூஜைகளும் நிகழ்ச்சிகளும் சிறப்பிக்க நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல். இந்தாண்டு ஏப்ரல் 16ம் தேதி அழகர் அழகர் ஆற்றில் இறங்க உள்ளார். இதனை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.