தமிழக பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 11ம் தேதி விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஆகும். இந்த திருவிழா பங்குனி மாதம் மிகவும் கோலாகலமாக வருட வருடம் கொண்டாடபடுகின்றன.
உள்ளூர் விடுமுறை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் எந்த வித பண்டிகைகளும் நடத்தப்படலாம் இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர். 2 வருடம் திருவிழா நடைபெறாத காரணத்தினால் இந்த வருடம் அதிகமாக கூட்டம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகின்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – சம்பள கணக்கீடு விவரங்கள் இதோ!
திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு பால், பழம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்தர்கள் அனைவரும் நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா இன்று தொடங்க இருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கான மாற்று பணி நாளாக வரும் ஏப்ரல் 23ம் தேதி வேலை நாளாகவும்,வழக்கமாக வேலை நாளாக கொண்டுள்ள அரசு அலுவலகளுக்கு,அடுத்த நாள் ஏப்ரல் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.