ஞாயிற்று கிழமையில் கோயம்பேடு சந்தை இயங்கும் – நிர்வாக குழு அனுமதி!!
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் சூழலில் வியாபாரிகளின் கோரிக்கைக்கு இணங்க ஞாயிற்று கிழமைகளில் கோயம்பேடு சந்தை வழக்கம் போல் இயங்க அங்கன்வாடி நிர்வாக குழு அனுமதி வழங்கியுள்ளது.
கோயம்பேடு சந்தை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக கடந்த 18 நாட்களாக ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. இதன் தொடக்கத்தில் சில தளர்வுகளை அளித்த தமிழக அரசு கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கினை கடுமையாக்கியது. அதன்படி ஊரடங்கின் பொழுது மளிகை, காய்கறி போன்ற கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் மக்களுக்கு தேவைப்படும் காய்கறிகள் வீடு தேடி வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தற்போது சென்னையில் தினசரி சுமார் 3 ஆயிரத்திக்கும் மேல் காய்கறி வண்டிகள் மக்களின் வீடு தேடி சென்று விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள் அனைவரும் ஞாயிற்று கிழமைகளில் கோயம்பேடு சந்தை இயங்க அனுமதிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்றபடி ஞாயிற்று கிழமைகளில் கோயம்பேடு சந்தை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அங்கன்வாடி நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி – ஜூன் முதல் விநியோகம்!!
இது குறித்து அதிகாரி கூறுகையில், பொதுமக்களின் நலனுக்காக தினசரி வீடு தேடி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவை அனைத்தும் மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தினசரி காய்கறி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை ஞாயிற்று கிழமைகளில் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்தார்.