தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – உடனடியாக வழங்கப்பட்ட நியமன ஆணை!!
தமிழகத்தில் புதுக்கோட்டையில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது . இந்த தனியார் நிறுவனங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 921 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றன. குறிப்பாக தங்களின் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த முகாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.
சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு – ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி!!’
இந்த மாபெரும் முகாம் புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் தலைமை வகித்தாா். இம்முகாம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் 128 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றது. மாவட்டம் முழுவதும் 6352 பேர் இந்த முகாமில் பங்கேற்றனர். இவர்களில் 921 பேர் உடடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கப்பட்டது. இவர்களில் 7 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது பெருமைக்குரியதாகும். அத்துடன் 208 போ் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து நோ்காணலுக்கு அழைக்கப்படவுள்ளனா்.
இந்த முகாமில் 11 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தனர். இதில் 244 போ் திறன் பயிற்சி தேவை என்று பதிவு செய்திருந்தனா். மேலும் பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நியமன ஆணைகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி அவர்கள் வழங்கி பாராட்டினார். இந்த முகாமில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரான வை. முத்துராஜா, வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரான ரேவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரான மணிகண்டன் ஆகியோரும் பங்கேற்றன. அத்துடன் அரசு மகளிா் கல்லூரி முதல்வரான புவனேஸ்வரி, முன்னாள் அரசு வழக்குரைஞரான கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவரான க. நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்டோறும் இந்த முகாமில் கலந்து கொண்டனா்.