தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – இந்த நிலை எப்போது மாறும்?

0
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் - இந்த நிலை எப்போது மாறும்?
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் - இந்த நிலை எப்போது மாறும்?
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – இந்த நிலை எப்போது மாறும்?

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பத் திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் கலந்தாய்வில் அனைத்து பணியிடங்களையும் காட்ட வேண்டும் என தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி, பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரிகள் நியமிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஏற்பாடு செய்து, அதற்கான அறிவிப்பையும் அண்மையில் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என்பதால், கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் மற்றும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 2022 முதல், பிப்ரவரி 2023ம் ஆண்டு வரை தற்காலிகமாக பள்ளிகளில் பணியாற்றுவார்கள். மேலும் பள்ளி மேலாண்மை குழுவினர் அந்தந்த ஊர் அல்லது பள்ளி அருகாமையில் உள்ள தகுதியுள்ள நபர்களை பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் குழு மூலமாக தற்காலிகமான முறையில் நியமிக்க கல்வித்துறை அனுமதித்துள்ளது.

மேலும் அரசு தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்காக மாவட்ட வாரியாக ஆசிரியர் காலியிட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் இடைநிலை ஆசிரியர் காலியாக உள்ளது என 4989 பணியிடங்களை கூறி உள்ளது. இப்பட்டியல் 2022 பிப்ரவரி மாதம் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் காலிப்பணியிடங்கள் என கூறும் கல்வித்துறை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் போது மட்டும் Need Post என்று கூறி நூற்றுக்கணக்கான பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல் மறைத்து விடுகிறது.

அந்த காலியிடங்களை கலந்தாய்வில் காட்டினால் சொந்த ஊர் இல்லை என்றாலும் அருகில் இருக்கும் மாவட்டத்தில் கூட ஆணை பெற்று ஆசிரியர் வேலை பார்க்க உதவியாக இருக்கும். மேலும் நிர்வாக மாறுதல் கிடையாது என்ற பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவு ஆறுதல் அளித்தாலும் இந்த குறையை சரி செய்து வரும் கலந்தாய்வில் அனைத்து பணியிடங்களை கலந்தாய்வில் காட்டி உதவ வேண்டும் என தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!