தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பபடவுள்ளது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கிற்கு உயர்நீதிமன்ற கிளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்:
தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் என மொத்தமாக 10,331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எப்போதும் ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் தான் தகுதியான ஆசிரியர்கள் நிரப்பப்படுகின்றனர். மேலும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி அளிக்கப்படாமல் உள்ளன. இந்த சூழலில் மாணவர்களும் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால், உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் தகுதி தேர்வாணையத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு ஜூலை 20 ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலரும் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சற்று முன் வெளியானது
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற கிளை சில கேள்விகளை அரசிடம் கேட்டுள்ளது. அதாவது, தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்திருக்கலாமே எனவும், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்த பின்பு நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே எனவும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்பு நிரந்தமாக பணி நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற கிளை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.