மருத்துவ கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமனம் – மத்திய அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆசிரியர்கள்:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது குறித்து பேசியுள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ படிப்பை பயிலும் மாணவர்களுக்கு முறையான ஆசிரியர்கள் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகளை முடக்க முடிவு – எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கை!!
Follow our Instagram for more Latest Updates
அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் மாநில அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தகுதியான ஆசிரியர் நியமனம் குறித்து அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது குறித்து மத்திய அரசின் ஆய்வு குழுவை அனுப்பி சோதனை செய்து கண்காணிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், முறையாக ஆசிரியர்களை பராமரிக்காத கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தரமான மருத்துவர்களை உருவாக்குவது மருத்துவ கல்லூரிகளின் கடமை என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.