ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை கொரோனா பேரிடர் முடிந்த பிறகு துறை வாரியாக பணியிடங்களை கண்டறிந்து அவர்களில் தகுதியானவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒப்பந்த ஊழியர்கள்:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று தீவிரமெடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ துறை பெரும் முயற்சிகளை கையாண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நோயாளிகளின் அதிகரித்ததால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியது.
கரூர் வைஸ்யா வங்கி வட்டி விகிதம் குறைப்பு – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
இந்த கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். இந்த கொரோனா பேரிடரை சமாளிக்க அரசு ஏராளமான மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மக்கள் பேசிய அமைச்சர், 30,000 மருத்துவ பணியாளர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. கொரோனா பேரிடர் முடிந்த பிறகு காலிப்பணியிடங்களை துறை வாரியாக பணி இடங்களை கண்டறிந்து அவர்களின் தகுதியானவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இவர்களை பணியமர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.