தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு – ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கண்காணிக்க தற்போது தமிழக அரசு மாவட்ட அளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.
கொரோனா தடுப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வருவதன் காரணமாக சுகாதாரத்துறை தக்க கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் சங்கிலியை உடைப்பதற்க்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்புகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள்? விரைவில் அறிவிப்பு!!
ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 7ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்ற சூழலில் தளர்வுகள் அளிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.