தமிழகத்தில் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் – பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்.
அதிகாரிகள் நியமனம்
கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாதுகாப்பு கருதி அனைத்தும் மூடப்பட்டது. நோய் பரவும் விகிதம் குறைவாக இருப்பதாலும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியதனாலும் நாளை முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள மாநிலங்களின் பட்டியல் – வெளியீடு!
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வகுப்பில் 20 மாணவர்கள் வீதம் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாடங்களில் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக பாடத்திட்டங்களை 50% வரை குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 37 அதிகாரிகள் என மாவட்ட ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்கள் வருகை எவ்வாறு இருக்கின்றன போன்ற அனைத்து விவரங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.