தமிழகத்தில் 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்.. விரைவில் தகுதித்தேர்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
உதவிப் பேராசிரியர் தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து TET முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக TET இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயம்.. ஓசூரில் அமைப்பு – அரசாணை வெளியீடு!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே 4000 துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். இதில் 5,408 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.