‘தமிழக அரசு கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்து வந்தது. இது குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்கள் :
தமிழகத்தில் மொத்தம் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் 5000க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் மாணவரின் சேர்க்கை வெகுவாக அதிகரித்ததால் கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனையடுத்து அரசு கல்லூரிகளில் 1, 875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இவர்களுக்கான நேர்காணல் இன்று முதல் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபரின் முகவரியை மாற்ற வேண்டுமா? – புதிய வழிமுறைகள்!
இது குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு கல்லூரிகள் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு இன்று 76 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.